வியாழன், 1 செப்டம்பர், 2016

எங்களுக்கும் இடம் ரிசர்வ் செய்து தர வேண்டும்

                           Image result for காதலர்கள் படங்கள்
எல்லோருக்கும் சுதந்திரம் வந்து விட்டதென்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று தெரியவில்லை.

நாங்களும் இந்நாட்டு மக்கள்தான். எங்களுக்கும் ஓட்டுரிமை இருக்கிறது. நாங்களும் ஓட்டுப் போடுகிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பட்சபாதம்? எங்கு சென்று சற்று இளைப்பாறினாலும் எங்களை போலீசும் பொது மக்களும் விரட்டுகிறார்கள்.

ஏன் நாங்கள் மட்டும் இவ்வாறு கஷ்டப்படவேண்டும்? எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். இதற்காக நாங்கள் எங்கள் உயிரையும் விடத்தயார்.

இப்படிக் கேட்பவர்கள் யார் தெரியுமா? குடிகாரர்களும் காதலர்களும். ஏன் இவர்களுடைய உரிமையைப் பறிக்க வேண்டும்? எங்கு போனாலும் இவர்களை விரட்டுகிறார்கள்.

ஊரில் உள்ள பார்க்குகளில் சிலவற்றை இவர்களுடைய முழு உபயோகத்திற்காக ஒதுக்கித் தரவேண்டும். உபயோகமில்லாத அரசு கட்டிடங்களை இவர்களுடைய உபயோகத்திற்காக ரிசர்வ் செய்யவேண்டும்.

இதையெல்லாம் செய்ய வக்கற்ற அரசும் ஒரு அரசா? இக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கிறோம்.

                           Image result for குடிகாரன் படங்கள்