விபத்தும் ஜோதிடமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விபத்தும் ஜோதிடமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

கோபியில் ஒரு விபத்து.

கார் மீது மரம் விழுந்து 4 பேர் நசுங்கி சாவு. 5 பேர் படுகாயம்.

இந்தச் செய்தி தினத்தந்தி, கோவை பதிப்பில் 4-8-2015 அன்று வெளியாகி இருந்தது. காரை ஓட்டியவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்துவிட்டார்கள். அதில் காரை ஓட்டியவரின் மனைவியும் ஒருவர்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது கோபி அருகில் பலத்த மழை பெய்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது ரோடில் இருந்த ஒரு மரம் காரின் மீது விழுந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இது ஒரு மிக துர்ப்பாக்கியமான செய்தி.

இந்த துக்கத்திற்கு அப்பால் நாம் யோசித்தால் இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று கூறுவதற்கு வழி ஏதுமில்லை. ஆனால் காரை ஓட்டியவர் ஒரு ஜோதிடர். இந்த மாதிரி ஒரு விபத்து நேரிடக்கூடும் என்பதை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய பரிதாபம்.

இதிலிருந்து நான் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஜோதிடத்தின் மூலம் நடக்கப் போவதைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை என்பதே. அப்படியிருக்க ஏன் பலர் இந்த ஜோதிடத்தை நம்பி தங்கள் குழந்தைகளின் கல்யாண காரியங்களை தள்ளிப் போடுகிறார்கள் என்பதுதான் இந்த 21ம் நூற்றாண்டின் அதிசயம்.