பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கங்கள்.


நிஜமா நாளைக்குத்தான் பொங்கல். இன்றைக்கு போகி. இது தமிழர் பண்டிகையா இல்லையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். இன்று சங்கராந்திப் பொங்கல் என்று ஒன்று வைப்பார்கள். மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரியின் தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால் இன்று கிராமங்களில் ஊருக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்துவார்கள். இது என்னவோ சிறுவர்களின் விளையாட்டு என்று பலர் கருதினாலும் இதில் உள்ள தத்துவத்தை எல்லோரும் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.

சொக்கப்பனையில் வேண்டாத பொருட்களை எல்லாம் போட்டு எரிப்பார்கள். இது ஒருவகையில் வீட்டை சுத்தம் செய்யும் காரியம். இதனுடன் கூடவே மனிதர்கள் தங்கள் மனதில் சேர்ந்திருக்கும் வேண்டாத எண்ணங்களையும் அந்த சொக்கப்பனையில் போட்டு எரித்து விட்டால் நாடு நலம் பெறும்.

என்னுடைய ஆசைக் கனவு இது.