தண்டனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்டனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 மார்ச், 2013

பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை கூடாது

கொஞ்ச நாளாக என்னுடைய கற்பனை ஜெட் வேகத்தில் வேலை செய்கிறது. அதனுடைய தாக்கம்தான் இந்தப் பதிவு.


சமீப காலமாக பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டு இருக்கின்றன. காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக ஆர்வலர்களும் பெண்ணியல் முன்னேற்றவாதிகளும் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று பலரும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். அது தவறு. என்னுடைய கருத்து என்னவென்றால் அப்படி தூக்குத் தண்டனை கொடுத்தால், அது எப்படி அந்த குறிப்பிட்ட பெண் அனுபவித்த வேதனைக்கு ஈடாகும்?

சமீபத்தில் நான் தேவலோகம் போயிருந்தபோது அப்படியே யமனையும் ஒரு வேலையாகப் பார்க்கப் போயிருந்தேன். அவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சார், நரகத்தைப் பார்க்கறீர்களா என்று கேட்டான். சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டு அதைப் பாக்கி வைப்பானேன் என்று போனேன்.

அங்கு பலவிதமான தண்டனைகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவைகளில் எனக்குப் பிடித்த இரண்டு தண்டனைகளைப் பற்றி மட்டும் சொல்லுகிறேன்.

எண்ணைக் கொப்பறை:

பெரிய பெரிய கொப்பறைகளில் நிறைய எண்ணை ஊற்றி கொதிக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஒருவனை நான்கு ஆட்கள் தூக்கிக்கொண்டு வந்து அதற்குள் அவனைப் போடுகிறார்கள். அந்த ஆள் படும் பாட்டை எழுத்தால் விவரிக்கமுடியாது. கொஞ்ச நேரத்தில் அவன் வெந்து போகிறான். அவனை. தப்பு, அந்தக் கரிக்கட்டையை வெளியில் எடுக்கிறார்கள். அவனுக்குப் பழைய உடம்பு வந்து விடுகிறது. மறுபடியும் அவனை அந்தக் கொப்பறையில் போடுகிறார்கள்.

இப்படியே அவனை நாள் முழுவதும் செய்கிறார்கள்.

அடுத்தபடியாக நான் பார்த்தது.

தோலுரித்து உப்புக் கண்டம் போடுவது:

தண்டனைக்குரிய ஆளை கைகால்களைக் கட்டி ஒரு மேஜை மேல் படுக்கவைக்கிறார்கள். நல்ல எக்ஸ்பர்ட் அறுவை மன்னர்கள் அவனுடைய தோலை மட்டும் உரித்து விடுகிறார்கள். பிறகு நல்ல நைஸ் உப்பை அவன் உடல் மேல் தடவுகிறார்கள். அப்படியே மேஜையுடன் தூக்கிக்கொண்டு போய் நல்ல வெயிலில் வைத்து விடுகிறார்கள். மாலை வரைக்கும் அவன் அப்படியே கிடக்கிறான். அவன் போட்ட சப்தம் பூலோகம் வரை கூட கேட்டிருக்கும்.

மாலையில் அவனை அவிழ்த்து விட்டால் பழையபடி ஆகிவிடுகிறான். மறுநாளும் இதே மாதிரி செய்வார்களாம்.

நான் பார்த்த வரையில் இந்த இரண்டு தண்டனைகளும் என் மனதிற்குப் பிடித்தன.

என்னுடைய கருத்து. ஏன் இந்த தண்டனைகளை நம் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கக் கூடாது?