அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜூலை, 2016

ஆர்க்கெஸ்ட்ராவில் எதுக்கு ஒருத்தன் ரெண்டு கையையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறான்.

      

இந்த இங்கிலீஷ்காரன் பாட்டுகள் ஆர்கெஸ்ட்ரா என்ற முறையில் நூற்றுக் கணக்கானவர்களை வைத்துக்கொண்டு பாடுகிறார்கள். பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. அதில் எல்லோரும் ஒரே சமயத்தில் அவரவர்கள் வாத்தியத்தை வாசிப்பார்களா, அல்லது ஒரு சிலர் மட்டுமே வாசித்துக் கொண்டு மற்றவர்கள் எல்லாம் டம்மியாக வாசிப்பது போல் பாவனை செய்வார்களா என்பது என்னுடைய தீராத சந்தேகம்.

ஏனென்றால் அத்தனை பேரும் ஒரே சமயத்தில் வாசித்தால் அது வெறும் சத்தமாகப் போய்விடுமே, சங்கீதம் வராதே  என்கிற எண்ணம்தான். இது ஒரு புறம் இருக்க, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஒரு ஆள் டிப்டாப்பாக உடையணிந்து கொண்டு, கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிற மாதிரி கையையும் உடலையும் ஆட்டிக்கொண்டு நிற்கிறாரே அவர் எதற்கு அந்த மாதிரி சேஷ்டைகள் செய்து கொண்டு இருக்கிறார் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.

என் ஆப்த நண்பர்களில் சிலர் இந்த மாதிரி பாட்டுகள் கேட்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். இந்த சந்தேகத்தை அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் என்னைப் பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு பிறகு சொன்னார்கள். அந்த ஆளுக்குப் பெயர் ம்யூசிக் கண்டக்டர். அவர்தான் இந்த ஆட்களையெல்லாம் இயக்குகிறார். அவருடைய கை அசைவுகளைப் பார்த்துத்தான் இந்த பாடகர்கள் எல்லாம் பாடவோ வாசிக்கவோ செய்வார்கள் என்றார்கள்.

அப்புறமும் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. அப்படியானால் எல்லோரும் அவர்களுக்கு முன்னால் காகிதத்தில் எதையோ எழுதி வைத்துக் கொண்டு, அதைப் பார்த்துப் பார்த்து வாசிக்கிறார்களே, அது எதற்காக என்றேன். என் நண்பர்களுக்கு அதற்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. சரி, தொலையட்டும் என்று விட்டு விட்டேன். ஆனால் இப்போது தமிழ் சினிமா உலகத்திலும் இந்த மாதிரி பேஷன் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு பிரபல இசையமைப்பாளர் இருக்கிறார். அவர் ஒரு பாட்டிற்கு ஏகப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார்.
   
               

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானவர்கள் பல விதமான வாத்தியங்களை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒருவன் கையை ஆட்டிக்கொண்டு இருக்கிறான். வாத்தியங்கள் வாசிக்கும் ஒருவனாவது அவரைப் பார்கிகிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் அவர்கள் பாட்டுக்கு வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள். பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இத்தனை பேரும் சேர்ந்துதான் அந்த இசையைக் கொண்டு வருகிறார்களா அல்லது சும்மா ஷோவுக்காக இத்தனை பேர்களை சேர்த்திருக்கிறார்களா என்பது எனக்கு இது வரை புரியாத ஒன்று.

அடுத்த விடியாவைப் பாருங்கள். ஒரு (அழகான) பெண் நாலைஞ்சு வாத்தியங்களுடன் இதே பாட்டைப் பாடுகிறாள். நன்றாகத்தான் இருக்கிறது.

                 

நம் கர்னாடக சங்கீதக் கச்சேரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலத்து வித்வான்கள் பாட்டு நோட்டை முன்னால் வைத்துக் கொள்கிறார்கள். அதை ஒரு கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டேதான் பாடுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்து வித்வான்கள் பல மணி நேரம் கச்சேரிகள் செய்த போதும் எந்த விதமான குறிப்புகளையும் உபயோகப் படுத்தவில்லை. இந்தக் காலத்து வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் தேவைப்படுகிறது?    அதேபோல் ஆங்கில இசை வித்வான்களுக்கு மட்டும் ஏன் நோட்ஸ் மற்றும் கண்டக்டர் தேவைப்படுகிறது என்பது ஒரு விடுகதையாகத்தான் தெரிகிறது. யாருக்காவது விடை தெரிந்தால் கூறலாம்.

இல்லை, உன் மரமண்டையில் இந்த நுணுக்கங்கள் எல்லாம் ஏறாது என்று நினைத்தால் அதையும் சொல்லி விடலாம். நான இந்த பிரச்சினையை மறந்து விட்டு வேறு பிரச்சினைகளை அலசுவதற்கு சரியாக இருக்கும்.

திங்கள், 25 ஜூலை, 2016

ஒரு தம்பதியருக்கு குழந்தைகள் அவசியமா?

                           
                                 Image result for couple
மனித இனம் தோன்றிய காலம் முதல் சமீப காலம் வரை குழந்தைகள் பெறுவது என்பது ஒரு குடும்பஸ்தனின் முக்கிய கடமையாக இருந்தது. இதை வம்ச விருத்தி என்று அழைத்தார்கள். கல்யாணமாகிய தம்பதியினரின் பெற்றோர்களை பார்ப்பவர்கள் விசாரிப்பது மருமகளுக்கு (மகளுக்கு) ஏதாவது விசேஷமா? என்பதாகத்தான் இருக்கும்.

குழந்தை இல்லாவிடில் அதை ஒரு துர்ப்பாக்கியமாகக் கருதினார்கள். அதற்குக் காரணம் நமது பாரம்பரியத்தில் பெற்றோரைப் பேணுதல் என்பதை ஒரு முக்கிய கடமையாகக் கருதினார்கள். அது ஒரு காலம்.

நிகழ் காலத்திற்கு வருவோம். இப்போது உயிருடன் இருக்கும் 60 வயதைத் தாண்டினவர்கள் எத்தனை பேரை அவர்களின் வாரிசுகள் பராமரிக்கின்றன? ஒரு ஐந்து சதவிகிதம் கூட இருக்காது என நினைக்கிறேன். காரணம் இக்காலத்தில் பொருள் ஈட்ட ஒவ்வொருவனும் பல ஜாலங்கள் புரிய வேண்டி இருக்கிறது.

தான் பிறந்த ஊரில் பிழைக்க வழி கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கானடா என்று திரை கடலோடி திரவியம் சேர்க்கிறான். இந்த ஓட்டத்தில் அவன் பெற்றோரை எங்கே நினைப்பது? நினைத்தாலல்லவா பாரமரிப்பதற்கு?

ஆக மொத்தம் வயதான பிறகு மகன் அல்லது மகள் நம்மைக் காப்பாற்றுவாள் என்ற நடைமுறை ஒழிந்து விட்டது. தன் கையே தனக்குதவி என்ற முறையில் தன்னிடம் ஏதாவது பணம் சேர்த்து வைத்திருந்தால் ஒழிய, வயதானவர்கள் மானமாக வாழ வழி இல்லை.

நிலைமை இப்படியிருக்க, குழந்தைகளைப் பெறுவானேன்? அப்புறம் அவர்கள் நம்மைக் காப்பாற்றவில்லையே என்று புலம்புவானேன்? என்னுடைய யோசனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இனிமேல் தம்பதிகள் விட்டு விடவேண்டும். அன்பு செலுத்த ஏதாவது உயிர் வேண்டுமென்றால் நாய், பூனை இப்படி ஏதாவது ஒரு பிராணியை எடுத்து வளர்த்தால் போதும். இனிமேலாவது ஜனங்கள் புத்தியாய்ப் பிழைத்தால் சரி.

வியாழன், 14 ஜனவரி, 2016

ஒரு அவசரப் பதிவு.

                                    Image result for ஏர்டெல் 4ஜி

நான் "பிஎஸ்என்எல்" ஐ விட்டு ஜகா வாங்கி ஏர்டெல்லுக்குப் போன கதை யை முன்பே எழுதியுள்ளேன்.

நேற்று ஏர்டெல் ஆபீசிலிருந்து ஒருவர் என் மொபைலில் பேசினார். சார், புதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. நீங்க இப்போ வச்சிருக்கிற பிராட்பேண்ட் ஸ்பீட் 4MBPS. 60 GB வரைக்கும்தான் இந்த ஸ்பீட். அப்புறம் 512 KBPS க்கு குறைஞ்சிடும். இப்போ பதுசா ஒரு ஆஃபர் வந்திருக்கு. அதுல ஸபீட் 16 MBPS. 100 GB வரைக்கும் இந்த ஸ்பீடுலேயே வேலை செய்யும். சார்ஜ் சும்மா ஒரு இருநூறு ரூபாய்தான் அதிகமாகும். நீங்க உபயோகிக்கிற அளவிற்கு இந்த ஆஃபர் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்.

நானும் சரி, 16 MBPS ஸ்பீட் எப்படியிருக்கும் பார்த்து விடலாம் என்று நினைத்து சரி என்று சொல்லி விட்டேன். இன்று காலை முதல் அந்த 16 MBPS ஸ்பீடில் என் பிராட்பேண்ட் வேலை செய்கிறது. டவுன்லோடு செய்வதெல்லாம் டக் டக்கென்று நடக்கிறது.

போகப்போகப் பார்க்கவேண்டும்.

"என் ஆசிரியர் பாகம் இரண்டு" ஞாபகம் இருக்கிறது. பொங்கல் கழித்து வெளியாகும்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

                               Image result for பதற்றம்

மனிதனின் வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத நேரம் ஏது? நமது அன்றாட நிகழ்வுகளில் சில, நாம் எதிர்பார்ப்பதற்கு நேர் மாறாகவும் நடக்கக்கூடும். அத்தகைய தருணங்களில் நம்மையும் அறியாமல் பதற்றம் தொற்றிக் கொள்ளும். சிலர் வீட்டில் இதனால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. திடீரென வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது கூட பதற்றத்திற்கு காரணமாக இருக்கும் !

குடும்பத்தலைவிக்கு காலையில் கண் விழித்தது முதல் பதற்றமும் பின் தொடரும். குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல தயார் படுத்துவதிலிருந்து கணவர் அலுவலகம் புறப்படும் வரை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்துப் பணியாற்ற வேண்டும். பள்ளிக்கும் அலிவலகத்திற்கும் உரிய நேரத்திற்குச் செல்ல பஸ், கார் போன்ற வாகனங்கள் முறையாக வந்து செல்ல வேண்டுமே என்கிற கவலை பதற்றமாக உருமாறும் ! சாலைகளில் எந்தவிதமான தடங்கல் விபத்து இன்றி பயணிக்க வேண்டுமென்ற ஆர்வம் கூட பதற்றத்திற்கு இடம் கொடுக்கும். இதே போல்தான் ரெயில் மற்றும் விமானப் பயணங்களின் போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும்.

படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு பயம்; தேர்வு முடிவுகளில் பதற்றம் தோன்றுவதை கண்கூடாகப் பார்க்கலாம். படித்து முடித்தபின் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது ஏற்படும் பதற்றம் சொல்லி மாளாது. உடல் நலமின்றி சிரம்பஃபடுபவர்கள் மருத்துவரைப் பார்க்கும் வரை பதற்றத்துடனேயே வரிசையிர் உட்கார்ந்து இருப்பார்கள். திருமணமான புதிதில் கணவன் வீட்டிற்கு முதன் முதலாகச் செல்லும் மணப்பெண்ணின் பதற்றம் கொஞ்ச நஞ்சம் அல்ல!

ஒரு சிலர் 'எனக்கு கவலைப்பட ஏதுமில்லை' என்று வீராப்பு பேசுவர். இது போன்றவர்களுக்கு ஏற்படும் மிகச்சிறிய சறுக்கலும் அவர்களது நிலைப்பாட்டை புரட்டிப் போட்டுவிடும்.

நம் உடல், மனம், பணம், குடும்பம், வேலை தொடர்புடைய பல கவலைகள் எல்லோருக்குமே இருந்தாலும், அதை மிகைப்படுத்தி, பதற்றப்படுவதே பெரும்பாலோரின் வழக்கமாக உள்ளது.தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பதற்றம் ஏற்படுவது சகஜமாக உள்ளது. இதனால் அவர்களது எண்ணங்களில், செயல்களில் ஒருவித தடுமாற்றம் தோன்றுகிறது. முடிவில் கவலை, கோபம், பயம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 பதற்றம் தோன்றுவதற்கான அறிகுறிகள்

o     மனதளவில் அதிகப்படியான அழுத்தம்.

o     எந்த ஒரு பிரச்சினையையும் சற்று முகைப் படுத்திப் பார்க்கும் போக்கு.

o     எதிலும் பரபரப்பு, எளிதில் கோபமடைதல்.

o      பிறரிடம் எரிந்து விழும் குணம்.

o      வியர்த்துக்கொட்டுதல்.

o      வயிற்றில் பரபரப்பு, வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி மலம் சிறுநீர்        கழிக்கும் உணர்வு.

o      உடல் சோர்வு அடைதல்.

o     கைகால் நடுக்கம்.

o     தூக்க உணர்வு மேலோங்குதல்.

o    சிறிய செயல்களுக்காக மனம் நோந்து போதல்.

o    எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியமல் திணறுதல்.


பதற்றம் ஏன் ஏன் தோன்றுகிறது என்பதற்கு சரியான காரணங்கள் அறியப்படவில்லை. சிலருக்கு இது பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம் என்று தெரிகிறது. நமது எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றிற்காகச் செயல்படும் மூளைப்பகுதியில் உள்ள நரம்பு செல்களின் செயல்பாட்டில் உள்ள குறைகள் காரணமாக இருக்க க்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மிகப்பெரிய மனத்துயர், நெருங்கியவரின் உறவுகளில் இழப்பு, உடல் பாதிப்பு போன்றவையும் காரணமாக இருக்கலாம். மது, காப்பி, டீ போன்றவற்றை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதாலும் பதற்றம் உண்டாகக் கூடும். சிலருக்கு இளம் வயதிலும், பொதுவாக 35 வயதிலும் பதற்றம் காணப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்படைகிறார்கள்.

பதற்றத்தை கட்டுப்படுத்த வழியுண்டா?

o    ஆரம்ப நிலையிலுள்ள பதற்றத்தை அறிவுசார் நடத்தை மாற்றுச் சிகிச்சை (Cognitive Behaviour Therapy) மூலம் சரி செய்யலாம்.

o    பதற்றத்தை நீக்கக்கூடிய சில மருந்துகள், மனச்சோர்வை நீக்கும் மருந்துகள் உள்ளன. இவற்றை உரிய மருத்துவர் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

o    வேலையுனூடே சற்று இளைப்பாறுதல், மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுதல், Bio-Feed Back எனப்படும் நம் உறுப்புகளின் இயக்கத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தல் முறைகள் ஆகியன நல்ல பயன் தரும்.

o    தினமும் உடற்பயிற்சி, சமச்சீர் உணவு போன்றவை பதற்றத்தைக் குறைக்க உதவும்.

இவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு முகவும் தேவையானது.

தகவல்: பொன்மொழி பிரபு, மனமகிழ் ஆலோசனை மன்றம், கோவை. தங்க மங்கை இதழ், ஜூன், 2015

தகவல் உதவி: முனைவர்  சி.ஆர்.எல். நரசிம்மன், ஓய்வு பெற்ற மண்ணியல் துறைப் பேராசிரியர், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், கோவை.(கைபேசி- 8754005750)      

வியாழன், 26 நவம்பர், 2015

இது என்னுடைய 900 ஆவது பதிவு

                          Image result for 900
முதலில் ஒரு சந்தேகம். "900 ஆவது" என்ற சொல், அதாவது எண்ணையும் எழுத்தையும் இணைத்து உருவாக்கிய சொல், இலக்கண விதிகளின்படி சரியா? "தொள்ளாயிரமாவது" என்று எழுதியிருக்கவேண்டுமோ? சரி, இதை இலக்கண நிபுணர்களின் விவாதத்திற்கு  விட்டு விட்டு நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம்.

இதுவரை, இந்தப் பதிவோடு சேர்த்து தொள்ளாயிரம் (எதுக்கு வம்பு, இலக்கணப்பிரகாரமே எழுதி விடுவோம்) பதிவுகள் எழுதியாகி விட்டது. வயதும் 80 ஆகி விட்டது. மூளையின் உயிரணுக்கள் குறைந்து கொண்டே போகின்றன. ஒரு வித சோம்பல் மனதையும் உடலையும் பீடிக்கிறது. பதிவு எழுத ஆர்வம் குறைகிறது.

இந்தப் புலம்பல்களை பதிவில் எழுதி என்ன ஆகப்போகிறது? பதிவுலக நண்பர்கள் சில ஆறுதல் வார்த்தைகள் கூறலாம். ஒரு நண்பர் (எதிரி நண்பர் என்று சொல்லலாம் என்று கருதுகிறேன்) நீங்கள் பதிவு எழுதாவிட்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா என்று கூடக் கேட்டார்.  இன்னொருவர் முனைவர் பட்டம் வாங்கி என்ன பயன்? பகுத்தறிவு இல்லையே என்கிறார்.

ஆகவே இந்த இரண்டு கருத்துக்களுக்கும் ஒரு தீர்வு காணவேண்டும். பத்து நாளாக நான் பதிவு எழுதவில்லை. உலகம் அஸ்தமித்துப் போன மாதிரி தோணவில்லை. ஆகவே நான் பதிவு எழுதுவதற்கும் உலகம் அஸ்தமிப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று நிரூபணம் ஆகி விட்டது.

ஆனால் சென்னையில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மக்களை மிகவும் வதைத்து விட்டது. நான் பதிவு எழுதாததிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று ஆராய வேண்டும். என்னமோ "கேயாஸ் தியரி" என்று ஒன்று இருக்கிறதாமே? நம் கமல் கூட தசாவதாரம் படத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது பிரகாரம் இந்த நிகழ்வுகளுக்குள் என்ன தொடர்பு என்று ஆராயவேண்டும். யாராவது இந்த ஆராய்ச்சிக்கு மான்யம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

                                          Image result for சென்னை வெள்ளம்

அடுத்து பகுத்தறிவுக்கும் முனைவர் பட்டத்திற்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆராயவேண்டும். இது இன்றைய வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஆராய்ச்சியை எப்படி செய்வது என்று இந்த துறையில் உள்ள நிபுணர்கள் கருத்துகள் சொன்னால் என்றென்றும் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

ஆஹா, எப்படியோ சோம்பிக் கிடந்த நரம்புகளைத் தட்டியெழுப்பி ஒரு பதிவைத் தேத்தியாகி விட்டது. என் பிதற்றல்களைத் தவறாது படித்து வரும் நண்பர்களுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.

வியாழன், 15 ஜனவரி, 2015

அறிவியல் பதிவு எண் 1

எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

                                        

மூடத்தனமான பதிவுகள் எழுதி அலுத்து விட்டது. ஆகவே என்னுடைய படிப்பிற்குத் தகுந்த மாதிரி அறிவியல் பதிவுகளையும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். அந்த வரிசையில் இது முதல் பதிவு.

இந்தப் பதிவிற்குண்டான ஆதாரங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை. லைப்ரரிக்குப் போக முடிவதில்லை. அதனால்தான் இந்த உத்தி.

                                                         

முன்னுரை:

அமெரிக்காவில் பெர்க்கிலி என்னுமிடத்திலுள்ள கலிபோர்னியா யூனிவர்சிடியில் வேலை பார்க்கும்  புரொபசர் ரேங்கில் உள்ள ஒரு ஆராய்ச்சி தம்பதியினர் தங்கள் சபாடிகல் லீவில் இந்தியாவிற்கு வந்திருந்தார்கள். சென்னை வந்த அவர்கள் மகாபலிபுரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாள் அங்கு சென்று அங்குள்ள சிற்பங்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய கைடு, குரங்கு பேன் பார்க்கும் சிற்பத்தை அவர்களுக்கு காட்டினான். இது என்ன என்று கேட்டதற்கு அவன் தன் அரைகுறை ஆங்கிலத்தில் " மங்கி பேன் சீயிங்க்" (குரங்கு பேன் பார்க்குது) என்று சொன்னான். அவர்களுக்கு "பேன்" என்றால் என்னவென்று தெரியவில்லை. "வாட் ஈஸ் பேன்" என்றார்கள்.

நம்ம ஆள் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் என்னென்னமோ சொல்லியும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் கடைசியாக ஒரு பேனைக் காட்டச் சொன்னார்கள். கைடு அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கூப்பிட்டு ஒரு பேனைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டான். அவள் உடனே தன் தலையிலிருந்து ஐந்தாறு பேன்களை எடுத்து அந்த புரொபசர் அம்மாவிடம் கொடுத்தாள்.

                                  

அந்த வெள்ளைக்காரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. தலையில் ஒரு பயலாஜிகல் சிஸ்டமே இருக்குதே என்று வியந்தாள். ஆஹா, நம் ஆராய்ச்சிக்கு ஒரு அருமையான சப்ஜெக்ட் கிடைத்தது என்று இருவரும் ஆனந்தப் பட்டார்கள். ஊருக்குப் போனதும் இதைப் பற்றி ஆராய்ச்சித் திட்டம் போட்டுவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்து ஊருக்குத் திரும்பினார்கள்.

ஆதாரம்:
George Krucik, MD, MBA
dr george krucik
George provides clinical review consulting services for Healthline.com.  He has a dual career in both medicine and information technology. He practiced primary care medicine in the Bay Area for over 14 years and has served in an executive capacity for several public software companies including Autodesk Australia and EleTel. He has designed and brought to market healthcare applications as a senior product manager atsalesforce.com and Healthline.com.
George graduated with a BS in Computer Science and Mathematics and an MD from the University of Manitoba, in Canada. He recently graduated with an MBA from the University of California

ஆய்வுத்திட்டமும் களப்பணியும்

இந்த ஆராய்ச்சி "தமிழ் நாட்டில் பெண்மணிகளின் தலைப்பேன் ஆராய்ச்சி" என்று பெயர் பெறும்.

களப்பணி இந்திய துணைக் கண்டத்திலுள்ள தமிழ்நாட்டில் நடைபெறும். களப்பணிக்காக 100 உள் நாட்டு உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கொடைக்கானலில் உள்ள கார்ல்டன் ஓட்டலில் இரண்டு வாரப் பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொருவரும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அனுப்பப் படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 1000 பெண்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆராய்ச்சிக்காக தயாரிக்கப்படும் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் பெற்று அதை பதிவு செய்வார்கள்.

இந்த விவரங்கள் அன்றன்று இணையம் மூலமாக கலிபோர்னியா யூனிவர்சிடிக்கு அனுப்பிவைக்கப்படும். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்தத் தகவல்களைத் தொகுத்து, பகுத்து, வகுத்து, கழித்து, கூட்டி உபயோகமான முடிவுகள் எடுப்பார்கள். இந்த முடிவுகள் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

அவ்வாறு ஒப்புதல் பெற்றபிறகு இந்த முடிவுகள் சர்வதேச விஞ்ஞானக் கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். இந்த அறிக்கை ஒரு லட்சம் பிரதிகள் தயாரிக்கப்பட்டு உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்களுக்கும், அனைத்து நாட்டு அரசுகளுக்கும், அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் அனுப்பப்படும். இதில் முடிவு செய்யப்பட்ட சிபாரிசுகளை  அனைத்து அரசு நிர்வாகங்களையும் நடைமுறைப் படுத்த அறிவுறுத்தப்படும். அதற்கு வேண்டிய செலவுகளுக்கான மானியம் உலக வங்கி கடனாக வழங்கும்.

ஆய்வு:

களப்பணியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

முடிவுகள்.

1. இந்த விஷயத்தைப் பற்றி ஆயிரம் வருடங்களுக்கு முன்னரேயே பாண்டிய மன்னன் காலத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது.
பெண்களின் கூந்தலில் பேன்கள் வருவதற்குக் காரணம் அந்தக் கூந்தலில் இயற்கையாகவே உள்ள நறுமணம்தான் காரணமா அல்லது மலர்கள் சூடிக்கொள்வதால் ஏற்பட்ட செயற்கை மணம் காரணமா என்று பாண்டிய மன்னன் கேட்டதாக  செப்பேட்டில் பதிவாகியிருக்கிறது.

அதற்கு சிவனே பாட்டெழுதி கோயில் பூசாரியிடம் கொடுத்தனுப்பியதாகவும்  அதனை ஒத்துக்கொள்ளாத அவைப்புலவர் தருமி என்பவர் (பதிவர் தருமி அல்ல) அந்தப் பூசாரிக்கு கொடுக்கவேண்டிய பரிசை மன்னன் கொடுப்பதைத் தடுத்ததாகவும் அதே செப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது.

பின்பு சிவனே நேரில் வந்து கட்டைப் பஞ்சாயத்து நடத்தி அந்த தருமி மேல் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே தமிழர்களும் ஆராய்ச்சி மனப்பாங்கு கொண்டவர்கள் என்று நிரூபணமாகிறது.

2. தமிழ்நாட்டுப் பெண்களின் தலைகளில் பேன் ஏன் உண்டாகிறது என்று ஆராய்ந்ததில் கீழ்க்கண்ட காரணங்க்ள புலனாகின்றன.

        2.1 தமிழ்நாட்டுப்பெண்கள் வெள்ளிக்கிழமை மட்டுமே தலைக்குக் குளிக்கிறார்கள். மற்ற நாட்களில் தலைக்கு குளிப்பதில்லை. அதனால் தலையில் அழுக்கு சேர்ந்து பேன் உற்பத்தியாகிறது. பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் தினமும் தலைக்குக் குளிப்பதால் அவர்கள் தலையில் பேன் பிடிப்பதில்லை.

       2.2 தமிழ்நாட்டுப்பெண்கள் தங்கள் தலைமுடிக்கு நிறைய எண்ணை தடவி இறுக்கமாகப் பின்னிக் கொள்கிறார்கள். அதனால் தலைமுடிக்கு காற்றோட்டம் போதுமான அளவு கிடைக்காமல் பேன்கள் நன்றாக இனப்பெருக்கம் அடைகின்றன.

        2.3 தவிர இந்தப் பெண்கள் அலங்காரம் என்ற பெயரில் கூந்தல் நிறைய பலவிதமான வாசனைகள் கொண்ட மலர்களை வைத்துக்கொள்கிறார்கள். இந்த வாசனைகள் பேன்களுக்கு மிகவும் பிடித்த வாசனையாகும். இதனாலும் பேன்கள் பெருகி வளர்கின்றன.

இந்தப் பழக்கங்களையெல்லாம் பாரம்பரிய வழக்கங்கள் என்று தமிழ்நாட்டுப்பெண்கள் பாதுகாத்து வருகிறார்கள். இதை அவர்கள் மாற்றவேண்டும். இந்த மாற்றத்திற்கு தமிழ்நாட்டு அறிஞர்களும் பதிவர்களும் உதவ வேண்டும்.

      2.4 தற்கால நாகரிக யவதிகள் இந்தப் பழக்கத்திலிருந்து மாறிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டுக் குளித்து முடியை அப்படியே காற்றோட்டமாக விட்டு விடுகிறார்கள். தவிர தலைக்கு எந்த எண்ணையும் தேய்ப்பதில்லை. எந்த விதமான மலர்களும் வைத்துக்கொள்வதில்லை. இவர்கள் பேன் தொல்லை இல்லாமல் பொடுகுத் தொல்லையினால் மட்டுமே அவதிப்படுகிறார்கள்.
பின்தொடர்ச்சி:

இந்த ஆராய்ச்சி இத்துடன் முடிவு பெறவில்லை. இது சம்பந்தமாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும். இதை தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் எடுத்து செய்யுமென்று எதிர் பார்க்கிறோம்.